வரலாறு நிமித்தம் அசைவுகள் கொண்டது இக்கால அருங்காட்சியகம் - முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி
பன்னாட்டு அருங்காட்சியக தினம்
அருங்காட்சியகம்...
வாய்மொழியாய்
கேட்டறிந்த
முன்னோர் வாழ்வு ,
பண்டைய இலக்கியங்கள்
ஓலைசுவடி
போர்க்கருவிகள்
தட்டுமுட்டு சாமான்கள்
நாணயங்கள்
முதுமக்கள் தாழி
சிற்பங்கள்
கல்வெட்டுகள்
அத்தனையும் அடுக்கி
அதிசயமாக
பார்க்க வைத்து
நினைவலையில்
காட்சியாகும் இடம்!
சமூக வளர்ச்சியில்...
பழம்பொருட்கள் சேகரிப்பில்
காட்சிப்படுத்தலில்
சேவைக்கு இயங்கும்
நிலையான அமைப்பான
அருங்காட்சியகம்
எதிர்கொள்ளும் பணிகளில்
பொதுமக்கள்
விழிப்புணர்வு பெற
அனுஷ்டித்த நாளே மே18தின
பன்னாட்டு அருங்காட்சியக தினம்!
வரலாறு நிமித்தம்
அசைவுகள் கொண்டது
இக்கால அருங்காட்சியகம் !
பழம்/பொருட்களின் மேல்
ஆர்வம் கொண்ட
வசதி படைத்த
குடும்பம்/நிறுவனம்
அடிப்படையாகக் கண்டது
அக்கால அருங்காட்சியகம்!
ஆதிமனிதனின்
அருங்காட்சியகம்
வாழ்ந்த குகைகளில்
ஓவியங்களாக!
மூதாதையர் வாழ்வு
பாடல்கள்/கதைகளில்
அருங்காட்சியகமானது!
கி.பி.1600 ல்
வரலாறு நிமித்த
தேடல்/விழிப்புணர்வில்
பிரிட்டிஷ் இராணுவம்
களவாடிச் சென்றவைகள்
1814 ல் கல்கத்தாவில்
அருங்காட்சியமாக
அலங்காரமானது!
அவைகள்
பொருட்களல்ல..
நம் முன்னோர்கள்
கடந்து வந்த பாதையும்
அவர்களின் வாழ்வியலும்!
அருங்காட்சியகத்தின் பயணம்
1. கொண்டாட்டம் கண்டது...1977
2. 90 நாடுகளில்/20000
மியூசியங்களில் விழாவானது..2009
3. 98 நாடுகள் விழா எடுத்தது...2010
4. 100 நாடுகள் கொண்டாடியது...2011
5. 129 நாடுகள் + 30000
அருங்காட்சியகம் விழாவாக....2012
அருங்காட்சியகம் கண்ட
கருப்பொருள்கள்
1992...அருங்காட்சியகமும்
சுற்றுப்புற சூழலும்
1993...மியூசியமும் உள்நாட்டு
மக்களும்.
1994....மியூசியத்தின் பின்புலக்
காட்சிகள்.
1995....பொறுப்பும்
பொறுப்பாற்றலும்
1996 ..நாளை பொருட்டு
இன்றைய சேகரித்தல்.
1997&1998... சட்டவிரோத
போக்குவரத்து கண்டிப்பு.
1999... கண்டுபிடிப்பின் மகிழ்வு
2000 ...மியூசியம் ...அமைதி
நல்லிணக்கத்தில்.
2001...சமூக கட்டமைப்பில்
அருங்காட்சியகம்.
2002 ... மியூசியமும் உலக
மயமாக்கலும்.
2003 ..மியூசியமும் நண்பர்களும்
2004 ...மியூசியமும் அருவமான
பாரம்பரியமும்.
2005 .. பண்பாட்டு வடிவமைப்பில்
மியூசியம்.
2006 ..மியூசியமும் இளைஞர்களும்
2007 .. மியூசியமும் உலகளாவிய
பாரம்பரியமும்.
2008 ...சமூக மாற்றம்/வளர்ச்சியில்
மியூசியம்.
2009 ... மியூசியமும்
சுற்றுலாத்துறையும்.
அருங்காட்சியக வகைகள்
1. தொல்லியல் அருங்காட்சியகம்...
தொன்மையான கட்டிடம்/
மக்களின் கலை & வரலாறு
காட்சியாக்குவது.
2. கலை அருங்காட்சியகம்...
ஓவியம்/வரைபடம்/
சிற்பங்கள் உள்ளடக்கியது.
3. வரலாற்று அருங்காட்சியகம்...
ஆவணங்கள்/தொல்
பொருட்கள் காட்சிப்படுத்தல்.
4. கடல்சார் அருங்காட்சியகம் ...
கப்பல்கள்/ ஏரி/ கடல்
பயண தொடர்பான
பொருட்கள் காட்சிப்பொருளாகி!
5. படைத்துறை/போர் மியூசியம் ..
போர்வீரர்கள் தொடர்பான
ஆயுதங்கள்/சீருடைகள் &
வானூர்தி/போர்த்தாங்கிகள்
காட்சிப் பொருளாக்குதல்!
6. இயற்கை வரலாற்று மியூசியம்..
உயிரின பல்வகைகளோடு.
(உ.ம்)..ஆக்ஸ்போர்டு
பல்கலைகழக மியூசியம்.
இந்தியாவில் அருங்காட்சியகம்
அஸ்ஸாம்/அரியானா/அருணாச்
சலப்பிரதேசம்/ஆந்திரா/இமாசல
பிரதேசம்/உத்திரப்பிரதேசம்/
ஒரிசா/குஜராத்/கர்நாடகா/கோவா/
கேரளா/டெல்லி/தமிழ்நாடு/ம்மு
காஷ்மீர்/பஞ்சாப்/பீகார்/மேற்கு
வங்காளம்/தெலுங்கானா/
புதுச்சேரி/மஹாராஷ்டிரா.
தமிழ்நாடு அரசு
அருங்காட்சியங்கள்
அருங்காட்சியமாக....
கரூர்/சென்னை/ஈரோடு/மதுரை/
கிருஷ்ணகிரி/சேலம்/திருச்சி/
திருநெல்வேலி/
தொல்லியல் அருங்காட்சியமாக..
குற்றாலம்/கோயம்பத்தூர்/
தர்மபுரி/பூண்டி/பூம்புகார்.
மாமல்லபுரம் கடல் மியூசியம்
காசு வன அருங்காட்சியகம்
ஊட்டி...மெழுகு அருங்காட்சியகம்
ஜி.டி.கார் அருங்காட்சியகம்
வேலூர் அரசு அருங்காட்சியகம்.
அருங்காட்சிய சிறப்புகள்
1.சென்னை ..
எழும்பூரில் 1851 ல் நிறுவி/ஆறு
கட்டிடம் & 46 காட்சிக்கூடமுடன்..
தொல்லியல்/நாணயவியல்/
விலங்கியல்/இயற்கை/
அறிவியல்/சிற்பம் துறைகளை
1846.ல் மதராசு கல்விக்கழகம்
கோரிக்கை வைக்க..
பிரிட்டானிய அரசு ஆளுநர்
சர்.ஹென்றி பாட்டிஸ்கர்
கிழக்கிந்தியக் கம்பெனி
அனுமதி பெற்று...
மருத்துவர்.எட்வர்ட் பல்ஃபர்
பொறுப்பாளராக..
29.04.1851ல் செ.ஜார்ஜ்
கோட்டை மாடியில் முதலில்,
1854.ல் பாந்தியன் கட்டிடமும்
கண்டது சென்னை
அருங்காட்சியகம்!
பாரதியின் கையெழுத்தில்
கவிதைகள்/சமண கால
சிற்பங்கள்/ரவிவர்மா
ஓவியங்கள் காண்பவர்
மனதை கொள்ளை கொள்ளும்
வகையில் காட்சியாகியுள்ளது!
2. லண்டன் மியூசியம்...
உலகின் மிகப்பெரிய
அருங்காட்சியமாக
அனைத்து துறைகளின்
சிறப்புகள் உள்ளடக்கியது!
3. டெல்லி ..தேசிய இயற்கை
வரலாற்று அருங்காட்சியகம் ....
நேபாள தூதரகம் அருகில்
1972 ல் நிறுவி
1978 ல் திறக்கப்பட்டு
26.04.2016 ல் தீ விபத்து
35 தீயணைப்பு வண்டி/200
தீயணைப்பு வீரர்களிருந்தும்
பயனின்றி எல்லாம் தீக்கு
இரையான அருங்காட்சியகம்!
4. பெங்களூர் அரசு மியூசியம்...
18.08.1865 ல்...
மைசூர் அரசால் நிறுவி
கல்வெட்டுகள்/சிற்பங்கள்/
பழங்கால நாணயங்கள்/நகை
அழகாக காட்சிப்பொருளாக்கிய
மிகப் பழமையான மியூசியம்!
5. விருதுநகர் அருங்காட்சியகம்....
நாணயங்கள்/ஆயுதங்கள்/
ஆடை/விவசாயப் பொருட்கள்/
ஈழத்து தாழி ஆகிய பழமை
காட்டும் 200 பொருட்களும்...
நவீன கால ஓவியம்/ சிற்பம்
காட்சியக காட்சியாக கொண்டது!
6. திருநெல்வேலி மியூசியம்...
முதுமக்கள் தாழி/மகாவீர்,
காளி,சண்டிகேஸ்வரர்
சிலைகள் காட்சிகளாக..
ஊமைத்துரை கூடமும்,
வீரபாண்டிய கட்டபொம்மன்
கூடமும் அழகுற அமைந்த
அருங்காட்சியமிது!
7. ஈரோடு அருங்காட்சியகம்...
1987 ல் நிறுவி...
சோழர் கல்வெட்டு/பனை
ஓலை கையெழுத்து பிரதி/
பர்கூர் கைவினைப் பொருள்/
கற்களாலான கைவினைப்
பொருட்கள் சிறப்புற
காட்சிப்பொருளாகியுள்ளது!
8. கிருஷ்ணகிரி அருங்காட்சியகம்...
பழைய கற்காலம் முதல்
புதிய கற்காலம் வரை...
மண்ணியல்/தொல்லியல்/
தாவரவியல்/மானுடவியல்/
விலங்கியல் துறை சார்ந்த
மூதாதையர் வாழ்முறை
நினைவூட்டும் பொருட்களும்
நடுகற்கள்..கல்வெட்டுகளோடு
காட்சிப்பொருளாக்கியுள்ளது!
9.கோவா...மெழுகு உலகம்...
சிறீஜி பாஸ்கரன் உருவாக்கியது.
மெழுகு சிலைகளாக....
டாக்டர்.இராதா கிருஷ்ணன்/
ராமகிருஷ்ண பரமஹம்சர்/
ஓசோ/ஆதிசங்கரர்/காந்தி/
விவேகானந்தர்/ஏசுபிரான்
சீடர்களுடன் கடைசி உணவு
உண்ணும் நிகழ்வு/கடையேழு
வள்ளல்களின்உருவங்கள்/
நக்கீரன் தருமிக்கு பொற்கிழி
தரும் நிகழ்வுகள்...
ஏறு தழுவும் நிகழ்வு தத்ரூப
சிற்பமாக வேறு பல
ஓவியங்களோடு அழகுற
கண்ணுக்கு விருந்தாக
அருங்காட்சியகத்தில்!
10. சங்க தமிழ் காட்சிகூடம் ....
மறைந்த முதலமைச்சர்
செல்வி. ஜெயலலிதா
மதுரையில் 1.75 கோடியில்
06.02.2016 ல்..
பழந்தமிழர் பெருமை
விளக்கும் வகையில்..
காட்சிப் பொருள்களமைத்து
காணொலி மூலம் திறந்து
வைத்த கூடமது!
11. கொழும்புவில்
சமகால அருங்காட்சியகம்...
கல்வியை கருப்பொருளாக்கி
சர்மிஜியை பொறுப்பாளராக்கி
கலை/கட்டிடக்கலை/அலங்காரம்
கைவினைப்பொருள்/வரலாறு
இவைகளோடு எழுத்து மூல
ஆவணங்கள் கொண்டு
டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி
அங்குரார்ப்பணமானது !
12.விண்வெளி அருங்காட்சியகம்...
இணையதளம் கண்ட திருப்பு
முனையாக...
முனைவர்.மறைமலை
இலக்குவனர் தொடங்கிய..
நாடு/மாநிலம் சுற்றுலா
செல்வோர் அவ்விடம் பற்றி
தெரிந்து பயனடையும்
வகையில் தொகுத்து
வைக்கப்பட்டுள்ளது!
13. பழனி அருங்காட்சியகம்...
கலாச்சாரம்/கலை/
அறிவியல்/இயற்கை
பொருட்களை பாதுகாத்தல்
விளக்கும் இடமாக...
அரிமா சங்க உதவ பள்ளி/
கல்லூரி மாணவர்களுக்கு
அறிவியல் கண்காட்சி
நடத்தி அறிவூட்டும்
இடமாகவும் அமைந்துள்ளது!
14. திண்டுகல் அருங்காட்சியகம்...
சுதந்திரம் முன்/பின்
நாணயம்/நோட்டுகள்/
மன்னர்கால தங்க நாணயம்/
இரும்பு/பித்தளை/ஈயம்/
செம்பு/பழங்கால மூங்கில்/
தோல் நாணயம் யாவும்
சிறப்புக்குரிய காட்சியுமாகி!
15.பூம்புகார் கடலடி மியூசியம்....
இந்தியாவின் ஒரே கடலடி
மியூசியம....
1997..ல் நிறுவினது!
இரட்டைச் சில்லி/ புத்தர்
தலை/ரோமானிய..சீனா
பானை ஓடு/ சீன ஜாடி/
சிலம்பு/கப்பல் மாதிரி
அனைத்தும் அமைக்கப்பட்டது!
16. கோயம்பத்தூர் மியூசியம்...
பூச்சிகள் அருங்காட்சியமிது!
17. வேலூர் அரசு அருங்காட்சியகம்...
வரலாற்று சிறப்பு மிக்க
வேலூர் கோட்டையில்..
1985 ல் நிறுவப்பட்டது.
18ஆம் நூற்றாண்டின்
இரு பீரங்கிகள் வாயிலில்..
முகப்பில் 16 அடி உயர
டைனோசரஸ்..
8 காட்சி கூடமுடன்....
(1) மாவட்ட அறிமுக கூடம்...
புவியியல் /புராதன நினைவுச் சின்னங்களுடன்.
(2).கற்சிற்ப கூடம்...
பல்லவ/சோழ/விஜயநகர
கால சிற்பங்களோடு.
(3) வரலாறு & அஞ்சல்
தலை கூடம்...
கற்கால/செம்பு கால/இரும்பு
கால கல் ஆயுதம்/முது
மக்கள் தாழி/ஈம பேழையுடன்.
(4).கலைக்கூடம்....
16 சமகால ஓவியம்/அக்ரிக்&
எண்ணைய் ஓவியங்களுடன்.
(5).இயற்கை அறிவியல் கூடம்...
ஈர /உலர் நிலை பதம்
கண்ட...கடல் குதிரை/பவளம்/
மீன்/நண்டு/புதை உயிர்கள்.
(6).படிம கூடம்...
அரும்பலூர் சமண படிமம்/
கண்டி தமிழ் மன்னன்
ராஜசிம்மன் பயன்படுத்திய
அரும்பொருட்கள் உண்டு.
(7).நாணயவியல் கூடம்...
வரலாற்று சான்றாவன
வட/தென்னிந்திய
நாணயங்களோடு.
(8).மானுடவியல் கூடம்....
ஆரணி ஜாகீர் தார்கர்
போர்வாளி/இருளர்
பொருட்கள்/இலவம்பாடி
மக்கள் ஆடை/அணிகலன்/
கரிகரி மெருகூட்டிய
பானைகளும் உண்டு.
TNPSC/TRB இலவச பயிற்சி
வகுப்பு நடத்தியது.
18. இலங்கை....பன்னாட்டு
பௌத்த மியூசியம்...
உலகில் முதலில் கட்டிய
பௌத்த காட்சியகம்...
கண்டியில் முதலாம் விமல
தர்மசூரியனின் மாளிகையில்
இயங்குகிற...இந்தியா/சீனா/
ஜப்பான்/நேபாளம்/கொரியா/
கம்போடியாய/மலேசியா/பூடான்
என 17 நாடுகள் பங்களித்த
பெருமை மிகு அருங்காட்சியகம்!
19.சமஸ்கிருத அருங்காட்சியகம்...
3 மியூசியம் இதிலுண்டு..
(1).அன்றாட கலை மியூசியம்.
(2). இந்திய டெரகோட்டா
மியூசியம்(பழங்குடி கலை).
(3). ஜவுளி மியூசியம்.
1979.ல் சமஸ்கிருத அறக்கட்டளை
நிறுவ....ஐயனார் சுடுமண்
குதிரை/மதுபாணி சுவரோவியம்
1500 சுடுமண் சிற்பங்கள்
சிறப்புற உண்டு.
பள்ளி குழந்தைகள் பண்பாடு
வளர்க்க 20-35 விருது வருடம்
தோறும் வழங்குகிறது.
20. ரங்கா வர்சிதா மியூசியம்...
1977...கட்டுமானப் பணி
02.04.1983 ...
இந்தோனேசியாவில்..
ஆளுநர் சோபாட்ஜோ திறந்தார்.
05.07.1989 ல்..
கல்வி அமைச்சர் ஃபுவாட்
ஹாசனா...கவிஞர்.ரங்கா
வர்சிதா பெயர் வைத்தார்.
4 கட்டிடங்ளுண்டு..
(1). நிலவியல்/புவியியல்/
புதை மடிவியல்/
தொடர்பான பொருட்களுண்டு.
(2).இந்து..பௌத்தம் சார்ந்த
நினைவு சின்னங்கள/
லிங்கம்/கோயில்/மசூதி
சிலைகளுண்டு.
(3) வரலாறு தொடர்பான
கலைப்பொருட்களுண்டு.
(4) கைவினைப் பொருட்கள்/
இசைக் கருவிகளுண்டு.
ஆதிச்ச நல்லூர் ...
25000கோடியில் மத்திய
அரசின் தொல்லியல் துறை
காணவுள்ள 5 இடங்களில் 1.
தமிழ்நாடு...ஆதிச்சநல்லூர்.
ஹரியானா...கார்க்கி
உத்திரப்பிரதேசம்...ஹஸ்தினாபூர்
மகாராஷ்டிரா...திவ்சாகா
குஜராத்....தோலவீரா.
கீழடி அகழாய்வு...
01.11.1956.ல் தொடங்கியது.
தமிழர் தொன்மை நாகரீகம்
பறைசாற்றுவது.
அமர்நாத் ராஜேந்திரன் குழு
ஆராய்ந்து 140000 சான்றுகள்
கிடைத்ததை....
கே.சுபாஷிணி கூறுகையில்
1.நவநாகரிக மனிதர் வாழ்ந்த
பகுதி இது.
2. நீராவி குவளைகள்/இரட்டை
சுவர்/மணிமாலை/சீப்பு/
தாயக்கட்டை.
3.கருப்பு/சிவப்பு பானைகள்.
4.கி.மு.230/250 காலத்தின்
வரி எழுத்துகள் உள்ள மட்
பாண்டங்கள்.
5. சாத்தன்/சாந்தன்/வேந்தன்
எழுதிய சான்றுகள் கிட்டியது.
விருதுகள்
தொல்லியல் துறையில்
சிறந்து விளங்கியமைக்கான
விருதுகள்...
1.1961 லிருந்து தொல்லியல்
துறையில் பணியாற்றி...
2002 ல் அகழாய்வு நூலெழுதிய
கல்வெட்டு அகழாய்வு செய்த
திரு.வேதாசலம் விருது பெற்றார்.
2.இராமசந்திரன் நாகசாமி...
கல்வெட்டு/தொல்லியல் துறை
இயக்குநர்...
2018 ல் ...இந்திய அரசின்
பபத்மபூஷன் விருது..
மாநில அரசின்
கலைமாமணி/முத்தமிழ்
வித்தகர் விருது.
3.பாரதி விருது...
நாணயவியல்/தொல்லியல்
ஆய்வாளர் திரு. சுப்பராயர்
பாரதி விருது பெற்றவர்.
4...பத்மஸ்ரீ விருது....
களம்பூர் சிவராமமூர்த்தி
..கல்கத்தா/புதுடெல்லி
அருங்காட்சியக பணியாளர்.
1968...பத்மஸ்ரீ விருது
1976...பத்மபூஷன் விருது
பெற்ற பெருமை வாய்ந்நநவர்.
(5). பரமசிவம்...
தஞ்சை தொல்லியல்/
செப்பு நிலை ஆய்வாளர்
மாநில விருது கண்டவர்.
(6).பாலசுப்ரமணியன்...
2012...கலைமாமணி விருது
கைவினை பொருள்
அருங்காட்சியகம் தந்தமைக்கு.
அருங்காட்சியகம்...
பழமையானவைகளை
சேமிப்பது மட்டுமல்ல...
நவீன தொழில் நுட்பத்தோடு
எதிர்கால சந்ததிகளுக்கு
தேவர் அமுதமாக
வழங்குவது!
மக்கள் அவர்கள் சூழல்
சார்ந்த சான்றுகளை பெறுதல்..
மனமகிழ்ச்சி/ஆய்வு/கல்வி
போன்ற நோக்கங்ளுக்கு
பயன்படுத்தல்...
ஆய்வுகளை தெரியப்படுத்தல்..
காட்சிப்படுத்தலில் உதவும்.
ஒரு சமுதாய வளர்ச்சி
சேவைக்கு இயங்கும்
ஒரு நிலையான
நிறுவனமான
அருங்காட்சியகத்தை...
திரைப்படம்/விளையாட்டு/
பொழுதுபோக்குக்கு
செலவிடும் நேரத்தில்
சிறிது ஒதுக்கி
கடமையாக எண்ணி
பார்வையியடுதல்...
அருங்காட்சியகத் துறைக்கு
நாம் செய்யும் நன்றிக் கடனாகும்!
அனைத்து அருங்காட்சியக
உறுப்பினர்களுக்கு...
சர்வதேச அருங்காட்சியக தின
வாழ்த்துகளைக் கூறும்....
முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி
குணசேகரன்,
முதுநிலை ஆசிரியை,
அ.ம.மேனிலைப்பள்ளி,
வாலாஜாப்பேட்டை...632513
9940739728.
Comments
Post a Comment