துர்க்கை அம்மன்கோவிலில் வரலாறும் விஷேச ஸ்தலங்களும்...


துர்க்கம் என்றால் அரண் என்று அர்த்தம். பக்தர்களுக்கு அரணாக இருந்து அரவணைத்துக் காப்பவளே துர்க்கை அன்னை.நீரில், நிலத்தில், வானில், கானில், தீயில், எதிரிகளுக்கு மத்தியில் என எங்கே இருந்து வேண்டினாலும் அங்கே உடன் தோன்றிக் கவசமாய்க் காப்பவள் அவளே என்கின்றன புராணங்கள்.


 


 


ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்


ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்(ஜெய)


துர்க்கை அம்மனை துதித்தால் என்றும்


துன்பம் பறந்தோடும்


தர்மம் காக்கும் தாயும் அவளை


தரிசனம் கண்டால் போதும்


கர்ம வினைகளும் ஓடும்


சர்வ மங்களம் கூடும்(ஜெய )


துர்க்கம் என்றால் அரண் என்று அர்த்தம். பக்தர்களுக்கு அரணாக இருந்து அரவணைத்துக் காப்பவளே துர்க்கை அன்னை.


நீரில், நிலத்தில், வானில், கானில், தீயில், எதிரிகளுக்கு மத்தியில் என எங்கே இரந்து வேண்டினாலும் அங்கே உடன் தோன்றிக் கவசமாய்க் காப்பவள் அவளே என்கின்றன புராணங்கள்.


தூய மனதோடு வணங்குவோரை ஓடிவந்து காத்திடும் அந்த துர்க்கை அன்னையின் திருவடிகளை நவராத்திரி நாட்களில் தரிசிப்பதே பெரும் பாக்கியம் என்பர். இதோ உங்களுக்குக் காட்சி தந்து கருணை மழை பொழிகிறாள் ஆலயங்கள் சிலவற்றில் அருளும் அன்னை துர்க்கை. தரிசியுங்கள். உங்கள் வாழ்வில் தடை யாவும் விலகும்.


பட்டீஸ்வரம் துர்க்காதேவி


தஞ்சை - கும்பகோணம் பேருந்த சாலையில் உள்ள பட்டீஸ்வரத்தில் உள்ளது தேனுபுரீஸ்வரர் ஆலயம்.


இந்த ஆலய கர்ப்ப கிரகத்தின் வடக்குப் பகுதியில் வடக்கு திசை நோக்கி எழுந்தருளியுள்ளாள் துர்க்கா தேவி.


எட்டுக் கரங்கள் கொண்டு இங்கு துர்க்கை சாந்த சொரூபிணியாக அருள்பாலிக்கிறாள்.


இந்த துர்க்கையின் திருமேனியைப் போன்ற தோற்றமும், பொலிவு மிக்க தெய்வீக அம்சமும் உடைய வேறு துர்க்கையை வேறு எங்கும் காண இயலாது என பக்தர்கள் கூறுகின்றனர்.


உய்யக்கொண்டான் திருமலை விஷ்ணு துர்க்கை


திருச்சியை அடுத்த உய்யக்கொண்டான் திருமலையில் உள்ளது ஆளுடையார் கோயில்.


இங்கு இறைவனின் தேவ கோட்டத்தில் வடக்கு திசையில் அருள்பாலிக்கிறாள் விஷ்ணு துர்க்கை.


திருமணம் நடக்க வேண்டியும் குழந்தை வரம் வேண்டியும் துர்க்கையை வேண்டும் பெண்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் அன்னைக்கும் எலுமிச்சைப் பழமாலை அணிவித்து மகிழத் தவறுவதில்லை.


மரத்துறை விஷ்ணு துர்க்கை


கும்பகோணம் - மணல்மேடு பேருந்து தடத்தில் உள்ள மரத்துறையில் உள்ள ஹரிஹரபுத்ர சுவாமி ஆலயத்தில் அருள்பாலிக்கிறாள் விஷ்ணு துர்க்கை.


பொதுவாக தேவ கோட்டத்தின் வடபுறத்தில் அருள்பாலிக்கும் துர்க்கை இங்கு கோயில் நுழைவாயிலிலேயே வடக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறாள்.


அன்னைக்கு இங்கு தனி மண்டபம் உள்ளது. இங்கு அன்னையை வணங்குவோர் சற்றே குனிந்து பார்த்தால்தான் துர்க்கையின் முழு உருவத்தையும் தரிசிக்க முடியும்.


பணிவு தேவை என்பதை இங்கே சொல்லாமல் உணர்த்துகிறாள் இந்த விஷ்ணு துர்க்கை.


கோவை அஷ்டபுஜ துர்க்கை


கோவை உக்கடம் அருகே உள்ளது. உஜ்ஜைனி மகா காளியம்மன் ஆலயம். இங்கு பிராகாரத்தின் மேற்குப் பகுதியில் அருள்பாலிக்கிறாள் அஷ்டபுஜ துர்க்கை. இந்த துர்க்கை எட்டுக் கரங்களுடன் மகிஷாசுரன் மேல் சூலம் குத்திய நிலையில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். இந்த துர்க்கையின் தலையில் சிவ பெருமானின் திருஉருவம் உள்ளது சிறப்பம்சம். இந்த ஆலயத்தில் துர்க்கையே பிரதானம். செவ்வாய் மற்றும் வெள்ளி நாட்களில் இந்த துர்க்கைக்கு நடைபெறும் ராகு கால பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.


திருமணத் தடை நீங்கவும், குழந்தைப் பேறு வேண்டியும் இந்த பூஜையில் கலந்து கொள்ளும் பெண்கள் நல்ல பலன் அடைகின்றனர்.


தங்கள் நன்றிக் கடனை நிறைவேற்ற பெண்கள் அன்னைக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டு மகிழ்வது இங்கு வழக்கமாக உள்ளது.


பீமநகர் விஷ்ணு துர்க்கை


திருச்சி பீம நகரில் உள்ளது வேணுகோபால் கிருஷ்ணன் ஆலயம். இந்த ஆலயத்தின் மகாமண்டபத்தின் வலது புறம் தனி சன்னதியில் விஷ்ணு துர்க்கை அருள்பாலிக்கிறாள். துர்க்கையின் முன் சிங்கத்தின் திருமேனியும் பலிபீடமும் உள்ளன.


துர்க்கை எட்டுக் கரங்களுடன் சூலம் ஏந்தி சிம்ம வாகனத்தில் காட்சி தருகிறாள்.


இந்த துர்க்கைக்கு வெள்ளிக்கிழமை ராகு கால நேரத்தில் எலுமிச்சை விளக்கிட்டு வேண்டிக் கொள்வதால் தடைப்பட்ட திருமணம் நடந்தேறுவதுடன் கன்னிப் பெண்கள் விரும்பிய மணாளனை கைபிடிப்பது நிஜம் என்கின்றனர் பக்தர்கள்.


கீழச் சூரிய மூலை துர்க்கையம்மன்


கும்பகோனத்திலிருந்து கிழக்கே 15 கி.மீ. தொலைவில் உள்ளது கீழ சூரிய மூலை என்ற தலம். இங்குள்ள சூரிய கோடீஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கிறாள் துர்க்கையம்மன்.


துர்க்கையின் ஒரு பாதத்தில் மெட்டி உள்ளது. தனது ஒரு காலை சற்றே முன் நகர்த்திய கோலத்தில் அருள்பாலிக்கிறாள் இந்த துர்க்கை.


தன்னை தரிசிக்க வரும் பக்தர்களை அன்னை நடந்து வந்து வரவேற்கிறாள் என்று இதற்கு பொருள் கூறுகின்றனர் பக்தர்கள்.


கோடாலி கருப்பூர் துர்க்கையம்மன்


கும்பகோணம் - அணைக்கரை நெடுஞ்சாலையில் அணைக்கரையிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது கோடாலி கருப்பூர் என்ற தலம்.


இங்குள்ள அங்காள பரமேஸ்வரி ஆலயத்தின் பிராகாரத்தில் கீழ்த்திசையில் அருள்பாலிக்கிறாள் துர்க்கையம்மன்.


மங்கையர் துயர் துடைக்கும் இந்த துர்க்கையம்மன் இந்தப் பகுதி பெண்களின் கண்கண்ட தெய்வம் என்பதில் சந்தேகமே இல்லை.


திருச்சி பாலக்கரை துர்க்கை


திருச்சி பாலக்கரையில் துர்க்கை அம்மனுக்கு தனி ஆலயம் உள்ளது. 500 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் அன்னைக்கு நான்கு கரங்கள். அன்னை தன் மேல் இடது கரத்தில் சங்கையும், வலது மேல் கரத்தில் சக்கரத்தையும், கீழ் வலது கரத்தில் சூலத்தையும், கீழ் இடது கரத்தில் பாச முத்திரையுடன் மகிஷனின் சிரத்தின் மேல் நின்ற கோலத்தில் இள நகை தவழ காட்சி அளிக்கிறாள். இறைவியின் விமானத்தில் உள்ள சுதை வேலைகள் மிகவும் சிறப்பாக உள்ளன. விமானத்தைச் சுற்றிலும் அஷ்டலஷ்மிகளின் திருமேனிகள் அலங்கரிப்பதுடன் நடு நாயகமாய் மூன்று திசைகளில் கிருஷ்ணனின் திருமேனியும் ஒரு புறம் வக்கிர காளியின் திருமேனியும் காணப்படுகிறது. இங்கு ஏழு வாரங்கள் ராகு கால பூஜையில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு விரைந்து திருமணம் நடப்பது உறுதி என்கின்றனர் பக்தர்கள்.


கதிராமங்கலம் வனதுர்க்கை


நவதுர்க்கைகளில் ஒன்றான வனதுர்க்கைக்கு கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் தனி ஆலயம் இருப்பது குறிப்பிடத்தக்கது. கல்வியில் சிறந்த கம்பர் இந்த அன்னையின்பால் விசேஷ பக்தி கொண்டவர். இவளை வழிபடாமல் எந்தச் செயலையும் அவர் துவங்குவது இல்லை. ஒருநாள் மழைக் காலத்தில் கம்பர் வீட்டுக் கூரை சிதைந்தது. கம்பர் அம்பாளை நினைத்து மனமுருகி "அம்மா உன் அருள் மழை என்றும் என்னைக் காக்கும்' எனக் கூறி படுத்து உறங்கிவிட்டார். காலை விழித்தெழுந்து பார்த்தபோது அவர் வீடு நெற்கதிர்களால் கூரை வேயப்பட்டு இருந்ததைக் கண்டு மனமுருகி "கதிர்தேவி கதிர்வேய்ந்த மங்கள நாயகி' எனப் பாடிப் பரவசமானார். இதுதான் நாளடைவில் கதிராமங்கலம் என மருவி உள்ளது. வனதுர்க்கா பரமேஸ்வரிக்கும் காசி விசாலாட்சி அன்னபூரணி ஆகியோருக்கும் தொடர்பு உண்டு. அம்பாள் தினமும் காசி போய் வருவதாக ஐதிகம் உண்டு. இதற்கு ஏற்ப இன்றும் அம்பாளின் கோபுர விமானத்தில் அம்பாளுக்கு நேர் எதிரே ஒரு சாண் சதுர அளவில் ஒரு துவாரம் உள்ளது. இதனால் இவளை ஆகாச துர்க்கை என்றும் சொல்வர். பொதுவாக ராகுவுக்கு அதிதேவதை துர்க்கை. அதுபோலவே அம்பாளின் திருஉருவமும் உள்ளது. முன்பக்கத் தோற்றம் அம்பாள் தோற்றமும் பாம்பு படம் எடுத்ததுபோல் உள்ளது.


கே.கே.நகர், திருச்சி விஷ்ணு துர்க்கை


திருச்சியில் உள்ள எஸ்.எம்.ஈ.எஸ். காலனியில் உள்ளது சித்தி விநாயகர் ஆலயம். இங்கு தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள் விஷ்ணு துர்க்கை. இந்த துர்க்கைக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை ராகு கால நேரத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. சுமங்கலிப் பெண்களும் கன்னிப் பெண்களும் நிறைய பேர் இந்த பூஜையில் கலந்து கொள்கின்றனர். நவராத்திரியின் போது ஒன்பது நாட்களும் விஷ்ணு துர்க்கைக்கு தினம் ஒரு அலங்காரம் செய்கின்றனர். இந்த அலங்கார அழகைக் காணவே பக்தர்கள் கூட்டம் இங்கு கூடுவது வழக்கமான செயல். கன்னியரின் கனவுகளை நனவாக்கும் இந்த விஷ்ணு துர்க்கை மகளிரின் கண்கண்ட தெய்வம் என்பதில் சந்தேகமில்லை.


துர்க்கை அம்மனை துதித்தால் என்றும்


துன்பம் பறந்தோடும்


தர்மம் காக்கும் தாயும் அவளை


தரிசனம் கண்டால் போதும்


கர்ம வினைகளும் ஓடும்


சர்வ மங்களம் கூடும்(ஜெய )


பொற் கரங்கள் பதினெட்டும்


நம்மை சுற்றி வரும் பகை விரட்டும்


நெற்றியிலே குங்கும பொட்டும்


வெற்றி பாதையை காட்டும்


ஆயிரம் கரங்கள் உடையவளே


ஆதிசக்தி அவள் பெரியவளே


ஆயிரம் நாமங்கள் கொண்டவளே


தாய்போல் நம்மை காப்பவளே (ஜெய)


சங்கு சக்கரம் வில்லும் அம்பும்


மின்னும் வாளும் வேலுடன் சூலமும்


தங்கக் கைகளில் ஏந்தி நிற்பாள் அம்மாதா...


சிங்கத்தின் மேல் அவள் வீற்றிருப்பாள்


திங்களை முடி மேல் சூடி நின்றாள்


மங்கள வாழ்வும் தந்திடுவாள்


மங்கையர்க்கரசியும் அவளே


அங்கயற்கண்ணியும் அவளே (ஜெய..)


வேலூர் காட்பாடி ரோடு சாலையில் அமைந்துள்ள ஸ்ரீவிஷ்ணு துர்க்கையம்மன் ஆலயம் உள்ளது. இங்கு ராகு கால பூஜை சிறப்பாக நடைபெறும். திருமணதடை, தொழில், குழந்தைகள் பாக்கியம் என்று பல..... குடும்பத்தில் அனைவருக்கும் எல்லா பிரச்சனைகளில் இருந்து நோய்தீர்த்து மக்களுக்கு அருள் படித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 


அன்னையின் திருவடிகள் சரணம் சரணம்!


Comments

Popular posts from this blog

அலுமேலுமங்காபுரம் நியாயவிலை கடையில் பொதுமக்களுக்கு நிவாரண நிதி...

வேலூர் மாவட்டம் அலுமேலுமங்காபுரத்தில் கொரோனா நிவாரண நிதி....

திருமணத்திற்கு லயன் சேவா சங்கம் சார்பாக செயலாளர் திரு.காமராஜ் நிதி உதவி...