வரலாறு காணாத வீழ்ச்சியில் கொகோ கோலா...

கொரோனா பயத்தால் குளிர்பானங்களை தவிர்த்த மக்கள்... வரலாறு காணாத வீழ்ச்சியில் கொகோ கோலா



கொரோனா ஊரடங்கு காரணமாக, இந்தியா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கொகோ கோலா நிறுவனத்தின் குளிர்பானங்கள் விற்பனை 16 % அளவுக்குக் குறைந்துள்ளது. 


கொகோ கோலா நிறுவனத்துக்கு இந்தியாதான் ஐந்தாவது மிகப்பெரிய சந்தையாகும்.


 இந்தியாவில் கோடைக்காலமான, ஏப்ரல் - ஜூன் காலகட்டத்தில்  குளிர்பானங்கள் அதிகளவில் விற்பனையாகும். 


ஒவ்வொரு ஆண்டும் கொகோ கோலா நிறுவனத்தின் விற்பனை விகிதம் ஏப்ரல் - ஜூன் மாத காலகட்டமாகிய இரண்டாவது காலாண்டில் பல மடங்கு அதிகரிக்கும். 


ஆனால், இந்த ஆண்டு கடுமையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாகவும் கொரோனா அச்சத்தால்  குளிர்பானங்களை குடிப்பதை தவிர்க்கவும் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.


 இதனால்,  ஏப்ரல் - ஜூன் காலகட்டத்தில் கொகோ கோலா நிறுவனத்தின் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தியாவில் மட்டும் விற்பனை 12 % சரிந்துள்ளது.


அமெரிக்காவின் அட்லாண்டாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கொகோ கோலா நிறுவனம் வெளியிட்டுள்ள இரண்டாவது காலாண்டு அறிக்கையில், உலகளவில் கொரோனா வைரஸ் பரவலால்  குளிர்பானங்கள் விற்பனை 16% அளவுக்குக் குறைந்துள்ளது. இதனால் அதன் நிகர வருமானம் 28 % அளவுக்கு சரிந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. 


மேலும் ஆசியா - பசிபிக் மற்றும் ஐரோப்பிய பகுதியில் குடிநீர் பாட்டில்கள் விற்பனை 24 % அளவுக்கு சரிந்துள்ளது. 


ஒவ்வொரு ஆண்டும், கோடைக்காலத்தில் மட்டும் இந்தியாவில் ரூ. 20,000 கோடி அளவுக்கு குளிர்பானங்கள் விற்பனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Comments

Popular posts from this blog

அலுமேலுமங்காபுரம் நியாயவிலை கடையில் பொதுமக்களுக்கு நிவாரண நிதி...

வேலூர் மாவட்டம் அலுமேலுமங்காபுரத்தில் கொரோனா நிவாரண நிதி....

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி